Sunday, November 02, 2008

நீ வேண்டும்



வற்றி விடாத என
வறண்ட இதயத்தோடு
காத்திருக்கும் உனக்கு
ஒவ்வொறு நொடியையும்
கரை இல்ல கண்ணீர் கடலில்
துடுப்பு இட்டு - உன் நாட்களை
கடக்க விட்டது யார்?

உடன் இருக்க சூல்நில்லை இல்லை
சுற்றி இருப்பவர்கள் உடன் இல்லை

உன் கண்ணீரை துடைக்க
கை குட்டை வாங்க
எதிர்காலத்தை நோக்கி செல்லும் எனக்கு
உன் கண்ணீரை சுமந்து செல்லத்தான் முடியவில்லை

உன் கண்ணீரில் இருக்கும்
உப்பை விட - உன் மனதில் இருக்கும்
கசப்பு தான் அதிகம்

உன் பாதத்திலிருந்து வரும் ரத்தம் பட்டு
நீ செல்லும் முள் பாதை
மலர்கள் நிறைந்த பாதையாகும் நிச்சயம்
அந்த மலர்ந்த எதிர்க்காலம்
உன் பெயரை சொல்லும் - ஆனால்
என் பெயர் சொல்ல அதுவரை நீ இருக்க வேண்டும் அம்மா...